Tuesday, 20 February 2018

IT ஊழியரை பற்றி உங்களுக்கு தெரியாத உண்மைகள் - 1


1. ஐ.டி ஊழியர்களுக்கு வேலை நேரம் என்பதே கிடையாது. ராணுவத்தினர் போல எந்நேரமும் தயாராக இருக்கனும்.

2. எப்போது வேலை போகும் என்று தெரியாது ஆனால் கேட்டால் நிரந்தர வேலை என்று சொல்வார்கள்.

3. மற்றவர்களை வேலையிலிருந்து நீக்கினால் தான் அங்கு சிலருக்கு வேலை இருக்கும்...

4. ஒவ்வொரு லீவு எடுக்கறதுக்கு நெறைய பேர் கிட்ட கெஞ்ச வேண்டியதா இருக்கும்.

5. கடுமையாய் உழைப்பவனுக்கு மரியாதை மட்டும் தான் கொடுப்பார்கள். வேற எதுவும் கொடுக்க மாட்டார்கள்.

6. வெளிநாட்டுக்கு அனுப்புறோம்னு சொல்லியே மொத்த ரத்தத்தையும் உறிஞ்சு விடுவாங்க.

7. 10000 சம்பாதிக்குறவன் கூட மாச கடைசில 500 வச்சிருப்பான். ஆனால் ஒரு லட்சம் சம்பாதிச்சாலும் 10ம் தேதி தொடரதுக்கு முன்னாடியே 10பைசா இல்லாம அலைவாங்க.

8. 3000 வாடகை வீட்டை ஐ.டில வேலை செய்றாங்கன்னு தெரிஞ்சதும் அப்படியே 10 மடங்கு ரேட் ஏத்தி சொல்லுவாங்க.

8.1 டாக்டர் கிட்ட போனா தேவை இல்லாத டெஸ்ட் மட்டும் 300 எழுதுவார்.
8.2 போலீஸ்ல மாட்டுனா 100 பைன் க்கு 1000 கேப்பாரு.

9. கடனை தவிர வேற எதுவும் அவன் கிட்ட இருக்காது.

10. ஐ.டில வேலை செய்யுறியே கை நிறைய சம்பாதிப்பானு யார் சொன்னாலும் இவங்களுக்கு கோபம் பத்திகிட்டு வந்துடும்.


சின்ன சிந்தனை


நான் பிடிச்சிக்கிறேன் 
எழுந்திரு என்று சொல்வதை விட 
உன்னால் முடியும் 
எழுந்திரு 
என்று சொல்...!!!

நீ சாப்பிடாமல் 
சாப்பிட மாட்டாள் 
அவள் சாப்பிடாமல் 
நீ சாப்பிட்டால் 
சாப்பிடவே மாட்டாள்...!!!
-------------- மனைவி-----------

குழந்தைகளின் செயல்களை 
அருகில் இருந்து 
பார்க்கும் வரம் கிடைத்தால் 
நீ முற்காலத்தில் 
புண்ணியம் செய்திருப்பாய்..!!





அடுத்தவன் பேஸ்புக்ல மேரேஜ் பண்ணி நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேனு ஸ்டேடஸ் போட்டா அப்படிலாம் இருக்க சேன்ஸ் கிடையாதே.. ஒரு வேல அவன் பொண்டாட்டி அப்படி போட சொல்லி மிரட்டி இருக்குமோனு சந்தேகப்பட தோனுது...!!!