1. ஐ.டி ஊழியர்களுக்கு வேலை நேரம் என்பதே கிடையாது. ராணுவத்தினர் போல எந்நேரமும் தயாராக இருக்கனும்.
2. எப்போது வேலை போகும் என்று தெரியாது ஆனால் கேட்டால் நிரந்தர வேலை என்று சொல்வார்கள்.
3. மற்றவர்களை வேலையிலிருந்து நீக்கினால் தான் அங்கு சிலருக்கு வேலை இருக்கும்...
4. ஒவ்வொரு லீவு எடுக்கறதுக்கு நெறைய பேர் கிட்ட கெஞ்ச வேண்டியதா இருக்கும்.
5. கடுமையாய் உழைப்பவனுக்கு மரியாதை மட்டும் தான் கொடுப்பார்கள். வேற எதுவும் கொடுக்க மாட்டார்கள்.
6. வெளிநாட்டுக்கு அனுப்புறோம்னு சொல்லியே மொத்த ரத்தத்தையும் உறிஞ்சு விடுவாங்க.
7. 10000 சம்பாதிக்குறவன் கூட மாச கடைசில 500 வச்சிருப்பான். ஆனால் ஒரு லட்சம் சம்பாதிச்சாலும் 10ம் தேதி தொடரதுக்கு முன்னாடியே 10பைசா இல்லாம அலைவாங்க.
8. 3000 வாடகை வீட்டை ஐ.டில வேலை செய்றாங்கன்னு தெரிஞ்சதும் அப்படியே 10 மடங்கு ரேட் ஏத்தி சொல்லுவாங்க.
8.1 டாக்டர் கிட்ட போனா தேவை இல்லாத டெஸ்ட் மட்டும் 300 எழுதுவார்.
8.2 போலீஸ்ல மாட்டுனா 100 பைன் க்கு 1000 கேப்பாரு.
9. கடனை தவிர வேற எதுவும் அவன் கிட்ட இருக்காது.
10. ஐ.டில வேலை செய்யுறியே கை நிறைய சம்பாதிப்பானு யார் சொன்னாலும் இவங்களுக்கு கோபம் பத்திகிட்டு வந்துடும்.
