உன் மொத்த அழகையும் கண்கள் காட்டி கொடுத்து விட்டதே ...!!
என் உயிர் மொத்தமும் உன் கண்கள் அள்ளிக்கொண்டு செல்லுதே.
ஒரு போதும் நினைத்ததில்லை நானும் ..
என் பாதம் ஓடிச்செல்லுதே
பார்த்துப் பார்த்து செல்லுதே
தேடித்தேடி செல்லுதே...
திருடனாக ஆக்கி விட்டாயே....
பார்த்து பார்த்து இருந்தேனே
பரிதாபமாய் பறிகொடுத்தேனே
உன்னிடம் என் வாழ்வை
பரிதாபமாய் பறிகொடுத்தேனே
தொலைவிலிருந்து வதைத்தது போதும்....
என் கூடவே இருக்க வந்து விடடி....!!