Saturday, 16 July 2016

என் மனைவியாக வந்து விடடி(பாடல் போன்ற கவிதை)

முகத்தை மூடாதடி நீயும் மூடாதடி வீணாய் மூடாதடி
உன் மொத்த அழகையும் கண்கள் காட்டி கொடுத்து விட்டதே  ...!!

பார்க்காதடி என்னை பார்க்காதடி திரும்பி பார்க்காதடி
என் உயிர் மொத்தமும் உன் கண்கள் அள்ளிக்கொண்டு செல்லுதே.

அவளை பின் தொடர வேண்டும் என்றும்
ஒரு போதும் நினைத்ததில்லை நானும்  ..

அவள் பாதம் பட்ட அருகே
என் பாதம் ஓடிச்செல்லுதே
பார்த்துப் பார்த்து செல்லுதே
தேடித்தேடி செல்லுதே...

திடமாய் இருந்த என்னை திரும்பி திரும்பி பார்த்து
திருடனாக ஆக்கி விட்டாயே....

பழகிய வாழ்வு என்று
பார்த்து பார்த்து இருந்தேனே
பரிதாபமாய் பறிகொடுத்தேனே
உன்னிடம் என் வாழ்வை

பரிதாபமாய் பறிகொடுத்தேனே
மையிட்ட கண்களை வைத்துக்கொண்டு
தொலைவிலிருந்து வதைத்தது போதும்....

என் மனைவியாக நீயும் வந்து விடடி....
என் கூடவே இருக்க வந்து விடடி....!!

Wednesday, 6 July 2016

மனைவியின் மேல் காதல் (குறுங்கதை)

சினிமாவிற்கு போக டிக்கட் எடுத்து கொண்டு வந்தான் கணவன்...

வழக்கம் போல மனைவி மேக்கப் போட்டு கலம்ப தாமதமாகியும் கோபப்படமால் அமைதி காத்தான்...

அவளை உட்கார சொல்லிவிட்டு பைக்கை எடுத்து கொண்டு வேகமாக திரையரங்கை நோக்கி சென்று கொண்டிருந்தான்..

அப்போது மழை வர ஆரம்பித்தது...  எங்கே ஒதுங்கறது என்று தேடிக்கொண்டே வண்டியின் வேகத்தைக் கூட்டினான்.. மனைவி வேற நனையுறாளே என்று பக்கவாட்டு கண்ணாடி வழியாக அவளை பார்த்தான்...

அவள் முகத்தை வானத்தை நோக்கி வைத்து கொண்டு புன்னகையால் மழையை ரசித்துக் கொண்டிருந்தாள்....

அதை கணவன் பார்த்ததும் வண்டியின் வேகம் குறைந்தது .... மனைவியிடம் திரும்பி ஒரு மெல்லிய புன்னகை புரிந்தான்... இருவரும் மழையை ரசித்துக்கொண்டே சினிமாவிற்கு செல்லாமல் ஒரு சின்ன நீண்டதொரு பயணத்தை தொடர்ந்தார்கள்....