Tuesday, 25 August 2015

போலிஸ்காரர் (சிறுகதை)

சுந்தர் தள்ளு வண்டியில் காலை உணவும் மதிய உணவும் தினமும் விற்று வந்தான் அதனருகில் ஒரு சிக்னல் இருந்தது அதில் கனகசுந்தரம் என்ற போக்குரவரத்து காவலர் வேலை செய்து வந்தார்.

கனகசுந்தரம் சிக்னலில் வேலை செய்யும் போது அவ்வளவு சந்தோசத்துடனும் பெருமையுடனும் காலை முதல் மாலை வரை உற்சாகம் குறையாமல் பணியாற்றுவார். அதை சுந்தர் பலமாதங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறான். சில நேரங்களில் அவரை பற்றி "இவர் பெரிய IPS அதிகாரி போல ஓவரா வேலை செய்ராரே" என்று தன் நண்பர்களிடம் கேலியாக பேசுவான்.


ஆனால் இன்று காலையிலிருந்து கனகசுந்தரம் மிகுந்த வருத்ததுடனும் சோகத்துடனும் வேலை செய்து கொண்டிருந்தார். அதை பார்த்த சுந்தருக்கு வியப்பாக இருந்தது. இவர் இப்படி இருந்து அவன் பார்த்ததே இல்லை.

அவனுக்கு அந்த ஆச்சர்யம் தீரவே இல்லை. அவரிடமே கேட்டுவிட வேண்டுமென்று முடிவு செய்து விட்டான். அவரிடம் கேட்பதற்கு தயக்கமாகவும் இருந்தது ஆனாலும் காரணத்தை தெரிஞ்சிக்க மனமும் துடித்தது.

எப்படியும் நம்ம ஹோட்டலுக்கு (தள்ளு வண்டி கடை) தான் சாப்பிட வருவார் அப்பொழுது கேட்டுக்கொள்ளலாம் என்று முடிவு செய்தான். அவரும் சாப்பிட வழக்கத்தை விட கொஞ்சம் தாமதமாக தான் வந்தார். அவருக்கு சுந்தர் உணவு பரிமாறினான். அவர் சரியாக சாப்பிடாமல் கடமைக்கு சாப்பிட்டு விட்டு கையை  கழுவி கொண்டு உணவுக்கான காசை கட்டிவிட்டு  மறுபடியும் கடமையாற்ற செல்ல தயாரானார்.

"சார் ஒரு நிமிஷம்" என்றான் சுந்தர்.

அவரின் அருகே சுந்தர் சென்று தாழ்வான குரலில் "சார் நீங்க இவ்வளவு  சோகமாய் இருந்து நான் பார்த்ததே இல்லை நீங்க ஏன் இவ்வளவு  சோகமா  இருக்கீங்க என்ன காரணம் என நான் தேரிஞ்சிக்கிலாமா" என கேட்டான்.

கனகசுந்தரம் சிறிது நேரம் யோசித்துவிட்டு ஒரு வாட்ஸப் வீடியோ ஒன்றை சுந்தருக்கு காட்டினர் அந்த வீடியோவில் ஒரு போலிஸ்காரர் சிறுநீரை பொது இடத்தில் கழிப்பது போல் அந்த வீடியோ இருந்தது. அந்த வீடியோ சிறுநீர் கழித்த போலீசையும் ஒரு நாயையும் ஒப்புமைபடுத்தியது போல கேலியோடு இருந்தது. அந்த விடியோவைப் பார்க்கும் போது சுந்தருக்கு அடக்க முடியாத அளவு சிரிப்பு வந்து விட்டது.

இருந்தாலும் அவன் சிரிப்பை அடக்கிக்கொண்டு "இது போல் பொது இடத்தில் சிறுநீர் கழிப்பது தவறு தானே சார் " என்று சுந்தர் கேட்டான்.

கனகசுந்தரம் அவனிடம் மெதுவாக பேச ஆரம்பித்தார்.

"தவறு தான் நான் இல்லை என்று சொல்லவில்லை சுந்தரம்.. ஆனால் எங்கள் வேலை பற்றி வீடியோ எடுத்தவர்கள் மறந்துவிட்டனர் என்று நினைக்கும்போது  தான் வேதனையாக உள்ளது.

எங்கள் வேலையில் நாங்கள் எப்போதும் பொது இடத்தில் தான் வேலை செய்ய வேண்டும். பாதிக்கு பாதி இடங்களில் இயற்கை உபாதையை கழிக்க கூட இடம் இருக்காது.

பல நேரங்களில் காலையில் வருவதாய் சொன்ன முக்கிய பிரமுகர் மாலையில் தான் வருவார். அதனிடையே போக்குவரத்து நெரிசல் ஆகாமல் நாங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் நாங்கள் இந்த பக்கம் அந்த பக்கம் எங்கும் நகர கூட முடியாது. அந்த இடத்தில் எது நடந்தாலும் எங்களை திட்டுவதற்கு என்றே ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது எங்கள் மேலதிகரிகள் உட்பட.

இந்த வீடியோவில் இருந்த போலிசை பற்றி எனக்கு தெரியாது ஆனால் அவர் வேலை செய்த இடத்தை பற்றியும் அப்போது அவர் இருந்த சூழ்நிலை பற்றியும் எனக்கு நன்கு தெரியும். அந்த சிக்னலை சுற்றி சில கிலோமீட்டருக்கு எந்த கழிவறையுமே இருக்காது. அப்போது காலை வருவதாய் சொன்ன ஒரு முக்கிய பிரமுகர் இதோ கலம்பிட்டோம் அதோ கலம்பிட்டோம் என்று சொல்லி 5 மணி நேரமாகியும் அவர் வரவில்லை.

அவரால் இயற்கை உபாதையை ஒரு கட்டத்தில் கட்டுபடுத்த முடியாமல் பக்கத்தில் உள்ள ஒரு இடத்தில் சிறுநீர் கழிக்கும் போது அதை வீடியோ எடுத்து விட்டனர். அதை எடுத்ததும் இல்லாமல் நாயுடன் சம்பந்தம் படுத்தி போட்டுள்ளனர். இது அவரை அவமானப்படுத்தியது போல தெரியவில்லை எங்கள் எல்லோரையும் அவமானப்படுத்தியது போல இருந்தது. எங்களுடைய கஷ்டம் பொதுமக்களுக்கு தெரியலைனா கூட பரவாயில்லை சுந்தரம் எங்க மேல் அதிகாரிகளுக்கு கூட தெரிய மாட்டுது  என்று அவருடைய வேதனையை வெளிப்படுத்தினார்.

 சரி சுந்தரம் நான் கலம்புறேன் என்று சொல்லி சிக்னலில் வேலை செய்ய மெதுவாக நடந்து சென்றார்.

சுந்தர் அவனை அறியாமலேயே அவருக்கு ஒரு சல்யூட் அடித்தான் ... சுந்தரத்திற்கு தானாகவே கனகசுந்தரத்தின் மேலும் போலிஸ் மேலும் ஒரு மரியாதை வந்தது...!!!!

Thursday, 20 August 2015

தொலைபேசியில் ஒரு காதல் (சிறுகதை)

ஜானகி வழக்கத்தை விட அன்று மிகவும் படபடப்பாக இருந்தாள். அதற்கு காரணம் அவளுடைய காதலனை அவள் பார்க்க போகிறாள் என்பது தான்...

ஜானகியும் ரமேஷும் ஒரு தவறான அழைப்பில் அறிமுகமாகி அவர்கள் நட்பை தொடர்ந்தனர். அந்த நட்பு ஒரு கட்டத்திற்கு மேல் காதலாய் கனிந்தது ...

ஜானகி பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்க மாட்டாள். அதற்காக அவள் ஏகப்பட்ட அவமானங்களை மற்றவர்களின் கேலி கிண்டல் மூலமாய் சந்தித்தவள் . அதனால் யாரிடமும் அதிகமாக பேச மாட்டாள்..
ரமேஷின் அந்த தொலைபேசி அழைப்பு தான் அவளுடைய வாழ்க்கையை சந்தோசமாய் மாற்றியது. அவனோட பேசும் ஒவ்வொரு நொடியும் அவளுக்கு அளவிட முடியாத அளவுக்கு சந்தோசத்தை வாரி வழங்கியது. ஆனால்
அது இன்றோடு முடிய போகிறது என்று மிகவும் பயத்தோடு இருந்தாள்.

ஏற்கனவே ஒரு முறை இருவரும் நேரில் பார்க்கலாம் என்று முடிவு செய்தார்கள். அப்போது ஜானகி மட்டும் ரமேஷை தூரத்தில் இருந்து பார்த்து விட்டாள். அவனுடைய அழகும் வசதியும் தூரத்தில் இருந்து  பார்த்துவிட்டு கண்டிப்பாக இவன் நம்மை எற்றுக் கொள்ள  மாட்டான் என்று முடிவு செய்து அவனை பார்க்காமல் அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள் . அவன் ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு அலுவலகத்தில் வேலைப்பளு என்று காரணம் சொல்லிவிட்டாள்.

அதன்பின் ஒவ்வொரு முறை அவனுடைய அழைப்பு வரும்போதுலாம் ஒருவித பதட்டத்தோடே பேசுவாள்.

ரமேஸ் இன்று உன்னை கண்டிப்பாக நான் பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டான். இவளும்  ஏதோதோ காரணம் சொல்லி பார்த்தாள் .. அவன் எதையுமே ஏற்றுக்கவில்லை.

அவனும் குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த பூங்காக்கு வந்து விட்டான். இவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இன்றோடு நம்முடைய மொத்த மகிழ்ச்சியும் முடிய போகுது என்று பயத்தோடு கண்ணீரும் வர ஆரம்பித்துவிட்டது.

ரமேஸ் தொடர்ந்து தொலைபேசியில் அவளுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே  இருந்தான். வேறு வழியே இல்லாமல் அவனை பார்க்க அந்த பூங்காக்கு சென்றாள் .


பூங்கா வாயிலிலே ரொம்ப நேரம் யோசித்து கொண்டே இருந்தாள். இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்று முடிவு செய்து ஒவ்வொரு அடியையும் ஆயிரம் யோசைனகளுடன் எடுத்து வைத்தாள்.

அவள் அவனை பின்புறம்  நெருங்குவதற்கும் ரமேஸ் அவளை தொலைபேசியில் அழைப்பதற்கும் நேரம் ஒரு சேர இருந்தது. ரமேஸ் மெதுவாக பின்புறம் திரும்பினான். இங்கே ஜானகி தான் நிற்கிறாள் என்று கண்டு பிடித்து விட்டான்.

அவளை பார்த்ததும் அவன் முகம் கோபமாய் மாறியது. அவன் அவளை கிட்ட நெருங்கி சென்றான். அவன் கிட்ட நெருங்க நெருங்க அவளுக்கு பயமும் பதற்றமும் அளவிட முடியாத அளவு அதிகரித்தது.

அவன் அவளை கிட்ட நெருங்கி முறைத்து தலையில் செல்லமாய் ஒரு சின்ன குட்டு வைத்து "உனக்காக எவ்வளவு நேரம் காத்துற்றுக்குது (காத்து கொண்டிருப்பது ) பாரு உனக்காக வாங்கி வைத்த பனியாரம் கூட ஆறி போச்சு " என்று சொன்னான்.

அவனுடைய பேச்சில் ஒரு சிறு தடுமாற்றம் கூட தெரியாததால் அவளுடைய அந்த பயம் ஆனந்த கண்ணீராய் மாறியது. அந்த கண்ணீரோட அவனோட மார்பில் முகம் புதைத்து அழுது கொண்டே சிரித்தாள்.. அவனும் இவளை பார்த்த சந்தோசத்தில் அவளுடைய முதுகை வருடிவிட்டான்.

Wednesday, 19 August 2015

நானும் எனது தேசபக்தியும்...!!!

1) எல்லையில் எனக்காக எனது இராணுவ வீரன் குண்டடி பட்டு சாகும் போது நான் வருந்தியதில்லை ஆனால் கிரிக்கெட்டில் தோற்கும் போது மட்டும் நான் வருந்தாமல் இருந்ததில்லை ...



2) எனது நாடு இவ்வளவு குப்பையாய் இருக்கிறதே என்று  கவலையுற்றேன் நான் சாப்பிட்ட சிப்ஸ் கவரை கீழே போட்டுக்கொண்டே!!!!

3) அடுத்தவர்கள் எச்சிலை ரோட்டில் துப்பும் போது கோபமுற்று இதற்குதான் என் நாடு உறுப்புட மாட்டுது என்று அவர்களை பார்த்து "சீ" என்று என் எச்சிலை துப்பினேன் அதே ரோட்டில்....!!!!

4) நான் சிக்னலில் நிற்கும் போது அடுத்தவர்கள் நிற்காமல் போகும் போது அவர்களை கண்டபடி மனதுக்குள்ளே திட்டினேன் அதே மற்றவர்கள் நிற்கும்போது நான்  நிற்காமல் சென்றால் புத்திசாலி தனம் என்று பெருமை கொண்டேன்...!!!

5) என் நாடு இலஞ்சத்தால் தான் முன்னேற மாட்டுது என்று பட்டிமன்றத்தில் ஈடு பட்டேன். ஆனால் எனக்கோ ஒரு வேலை ஆக வேண்டும் என்ற போது அது அவர்கள் செய்யும் வேலைக்கு ஏற்ற சன்மானம் தான் என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்...

6) பத்திரிகை செய்திகளில் அடிப்பட்டவர்களுக்கு மற்றவர்கள் உதவி செய்யவில்லை என்று  அறிந்ததும் அவர்களை கண்டபடி விமர்சித்தேன் அதே என் முன்னே அடிபட்டு இருக்கும் போது மற்றவர்கள் உதவி செய்யட்டும் என்று எனக்கு நேரமாகி விட்டது என்று என் வேலையை தொடர்ந்தேன்...!!!

7) குறிப்பிட்ட சினிமா நடிகர் நடித்த படத்திற்கு டிக்கெட் எடுக்கவும் படம் பார்க்கவும் ஒரு நாள் முழுவதும் வீணடித்து பெருமைக்கொண்டேன். ஆனால் ஓட்டுப்போட அரை மணி நேரம் செலவழிக்க ஆயிரம் முறை யோசித்தேன்...

8) பேஸ்புக்கில் வரும் இந்தியாவின் பெருமைகளை லைக்சும் (likes) ஷேரும் (Share)  செய்து என்  தேசபக்தியை வெளிபடுத்தி கொண்டேன்.

 இது போல் ஆயிரமாயிரம் உதாரணங்களை சொல்லிக்கொண்டே இருந்தேன் ஆனால் ஒன்றை கூட திருத்திக்கொள்ளாமல்
அடுத்தவர்களை விமர்சித்தே என் தேசபக்தியை முடித்துக்கொண்டேன்.....!!!

Tuesday, 18 August 2015

அதி வேகம் ஆபத்தை .தரும்...!!! (சிறுகதை)


ராமுவும் ராஜுவும் அருகருகே குடி இருக்கும் வாலிபர்கள்... இவர்கள் இருவருக்குமே எப்போதுமே ஆகாது.... இருவருமே ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள்...

ராமு படிப்பிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவன். ஆனால் ராஜு அதற்கு நேர் மாறானவன். எப்போதுமே சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பவன்.

ராமுவுக்கு பைக் ரேஸ் ஓட்டுவதில் அலாதிப்பிரியம் உண்டு. அதனால் ஒரு 300 CC  பைக்கை வாங்கினான். எப்போதுமே வேகமாக பைக்கை ஒட்டுவான்... என்னதான் ராஜு ஒழுக்கம் இல்லாதவனாக இருந்தாலும் பைக்கை மிதமான வேகத்தில் தான் ஒட்டுவான்.   ஏனென்றால் வேகமாக ஓட்டினால் அடுத்தவர்களுடன் சேர்ந்து நம் உயிரும் பிரிந்து விடும் என்று தெளிவாய் அறிந்திருந்தான்.


ஒரு நாள் கல்லூரி முடிந்ததும் ராஜு முன்னாடியே வீட்டுக்கு கிளம்பி அவனுடைய வண்டியில் மித வேகத்தில் சென்று கொண்டிருந்தான். அப்போது ராமு அவனுடைய ரேஸ் பைக்கில் வேகமாக பின்னாடி வந்து " நான் ஒரு 10 நிமிசத்துல வீட்டுக்கு போய்டுவேன் நீ ஒரு பத்து நாளுக்குள்ளவாது வீட்டுக்கு வந்துடு" என்று  கிண்டல் செய்து அவனுடைய வண்டியை மின்னல் வேகத்தில் செலுத்தினான்.

ராஜு வண்டியில் செல்லும் போது அவனுடைய கவனத்தை சிதற விடமாட்டான். அதனால் ராமுவின் கேலி அவனை பெரிதாய் பாதிக்கவில்லை. அவன் பயணம் வீட்டை நோக்கி மித வேகத்தில் தொடர்ந்து கொண்டிருந்தது.

ராஜு சில கிலோ மீட்டர் பயணம் செய்த பின் ஒரு விபத்தை பார்க்கிறான். அநேகமாக எதோ பைக் விபத்து போல தெரிகிறதே என்று கிட்ட நெருங்கி பார்த்த பின் தான் அவனுக்கு தெரிகிறது அது ராமுவின் வண்டி.

விசாரித்து பார்த்ததில் ராமுவின் வண்டி வேகமாக வந்ததில் கட்டுப் பாட்டை இழந்து நின்று கொண்டிருந்த லாரி மேல் மோதியது என்று.

உடனே ராஜுஆம்புலன்சை தொலைபேசியில் அழைத்து அருகே இருந்த  மருத்துவமனைக்கு கொண்டு சென்றான். அதே சமயம் அவர்களின் வீட்டுக்கும் தகவல் அனுப்பினான் .. பலமணி நேரம் தீவிர சிகிச்சைக்கு அப்புறம் ராமு பிழைத்து கொண்டதாய் மருத்துவர் அவர்களின் தாய் தந்தைக்கு தகவல் தெரிவிக்கிறார். ஆனால்  சில நாட்கள் ராமு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற வேண்டுமென்று தகவல் தெரிவிக்கிறார்.

ராமுவின் தாயும் தந்தையும் கண்ணீர் மல்க ராஜுவுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.

ராமு அன்றைக்கே அவசர பிரிவில் இருந்து சாதாரண பிரிவிற்கு கொண்டு வந்தார்கள்.

ராஜு ராமுவை பார்க்க செல்கிறான். ராமு மெதுவாய் கண்களை திறந்து ராஜுவை  பார்க்கிறான். அப்பொழுது ராஜு ராம் அருகே சென்று மிகவும் மெல்லிய குரலில் "நான் இன்னும் 10 நிமிசத்துல வீட்டுக்கு போய்டுவேன் நீதான் வீட்டுக்கு வர 10 நாட்களாகும்" என்று சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்கிறான்.

ராமுவின் கண்கள் ராஜுவுக்கு நன்றி சொல்லியும் தான் செய்த தவறை எண்ணியும் கண்ணீரை வெளி கொண்டு வந்தது.

Thursday, 13 August 2015

தோல்வியின் மருந்துகள் ...!!!!

1)
நீ
ஒப்புக் கொள்கிறாயோ
இல்லையோ - உன்
வெற்றிக்கு
பல பேர்
காரணமாக இருக்கலாம்
உன் தோல்விக்கு
நீ மட்டுமே காரணம்...!!!!!

2)
வெற்றி
என்பது
ஒருமுறை
செய்த தவறை
மறுபடியும்
செய்யாமல் இருப்பது தான்...!!!!

3)
தோற்பதில்
பெருமை கொள்
ஒரு
புது வழியை
கண்டு பிடித்திருக்கிறேன்
என்று..!!!!