சுந்தர் தள்ளு வண்டியில் காலை உணவும் மதிய உணவும் தினமும் விற்று வந்தான் அதனருகில் ஒரு சிக்னல் இருந்தது அதில் கனகசுந்தரம் என்ற போக்குரவரத்து காவலர் வேலை செய்து வந்தார்.
கனகசுந்தரம் சிக்னலில் வேலை செய்யும் போது அவ்வளவு சந்தோசத்துடனும் பெருமையுடனும் காலை முதல் மாலை வரை உற்சாகம் குறையாமல் பணியாற்றுவார். அதை சுந்தர் பலமாதங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறான். சில நேரங்களில் அவரை பற்றி "இவர் பெரிய IPS அதிகாரி போல ஓவரா வேலை செய்ராரே" என்று தன் நண்பர்களிடம் கேலியாக பேசுவான்.
ஆனால் இன்று காலையிலிருந்து கனகசுந்தரம் மிகுந்த வருத்ததுடனும் சோகத்துடனும் வேலை செய்து கொண்டிருந்தார். அதை பார்த்த சுந்தருக்கு வியப்பாக இருந்தது. இவர் இப்படி இருந்து அவன் பார்த்ததே இல்லை.
அவனுக்கு அந்த ஆச்சர்யம் தீரவே இல்லை. அவரிடமே கேட்டுவிட வேண்டுமென்று முடிவு செய்து விட்டான். அவரிடம் கேட்பதற்கு தயக்கமாகவும் இருந்தது ஆனாலும் காரணத்தை தெரிஞ்சிக்க மனமும் துடித்தது.
எப்படியும் நம்ம ஹோட்டலுக்கு (தள்ளு வண்டி கடை) தான் சாப்பிட வருவார் அப்பொழுது கேட்டுக்கொள்ளலாம் என்று முடிவு செய்தான். அவரும் சாப்பிட வழக்கத்தை விட கொஞ்சம் தாமதமாக தான் வந்தார். அவருக்கு சுந்தர் உணவு பரிமாறினான். அவர் சரியாக சாப்பிடாமல் கடமைக்கு சாப்பிட்டு விட்டு கையை கழுவி கொண்டு உணவுக்கான காசை கட்டிவிட்டு மறுபடியும் கடமையாற்ற செல்ல தயாரானார்.
"சார் ஒரு நிமிஷம்" என்றான் சுந்தர்.
அவரின் அருகே சுந்தர் சென்று தாழ்வான குரலில் "சார் நீங்க இவ்வளவு சோகமாய் இருந்து நான் பார்த்ததே இல்லை நீங்க ஏன் இவ்வளவு சோகமா இருக்கீங்க என்ன காரணம் என நான் தேரிஞ்சிக்கிலாமா" என கேட்டான்.
கனகசுந்தரம் சிறிது நேரம் யோசித்துவிட்டு ஒரு வாட்ஸப் வீடியோ ஒன்றை சுந்தருக்கு காட்டினர் அந்த வீடியோவில் ஒரு போலிஸ்காரர் சிறுநீரை பொது இடத்தில் கழிப்பது போல் அந்த வீடியோ இருந்தது. அந்த வீடியோ சிறுநீர் கழித்த போலீசையும் ஒரு நாயையும் ஒப்புமைபடுத்தியது போல கேலியோடு இருந்தது. அந்த விடியோவைப் பார்க்கும் போது சுந்தருக்கு அடக்க முடியாத அளவு சிரிப்பு வந்து விட்டது.
இருந்தாலும் அவன் சிரிப்பை அடக்கிக்கொண்டு "இது போல் பொது இடத்தில் சிறுநீர் கழிப்பது தவறு தானே சார் " என்று சுந்தர் கேட்டான்.
கனகசுந்தரம் அவனிடம் மெதுவாக பேச ஆரம்பித்தார்.
கனகசுந்தரம் சிக்னலில் வேலை செய்யும் போது அவ்வளவு சந்தோசத்துடனும் பெருமையுடனும் காலை முதல் மாலை வரை உற்சாகம் குறையாமல் பணியாற்றுவார். அதை சுந்தர் பலமாதங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறான். சில நேரங்களில் அவரை பற்றி "இவர் பெரிய IPS அதிகாரி போல ஓவரா வேலை செய்ராரே" என்று தன் நண்பர்களிடம் கேலியாக பேசுவான்.
ஆனால் இன்று காலையிலிருந்து கனகசுந்தரம் மிகுந்த வருத்ததுடனும் சோகத்துடனும் வேலை செய்து கொண்டிருந்தார். அதை பார்த்த சுந்தருக்கு வியப்பாக இருந்தது. இவர் இப்படி இருந்து அவன் பார்த்ததே இல்லை.
அவனுக்கு அந்த ஆச்சர்யம் தீரவே இல்லை. அவரிடமே கேட்டுவிட வேண்டுமென்று முடிவு செய்து விட்டான். அவரிடம் கேட்பதற்கு தயக்கமாகவும் இருந்தது ஆனாலும் காரணத்தை தெரிஞ்சிக்க மனமும் துடித்தது.
எப்படியும் நம்ம ஹோட்டலுக்கு (தள்ளு வண்டி கடை) தான் சாப்பிட வருவார் அப்பொழுது கேட்டுக்கொள்ளலாம் என்று முடிவு செய்தான். அவரும் சாப்பிட வழக்கத்தை விட கொஞ்சம் தாமதமாக தான் வந்தார். அவருக்கு சுந்தர் உணவு பரிமாறினான். அவர் சரியாக சாப்பிடாமல் கடமைக்கு சாப்பிட்டு விட்டு கையை கழுவி கொண்டு உணவுக்கான காசை கட்டிவிட்டு மறுபடியும் கடமையாற்ற செல்ல தயாரானார்.
"சார் ஒரு நிமிஷம்" என்றான் சுந்தர்.
அவரின் அருகே சுந்தர் சென்று தாழ்வான குரலில் "சார் நீங்க இவ்வளவு சோகமாய் இருந்து நான் பார்த்ததே இல்லை நீங்க ஏன் இவ்வளவு சோகமா இருக்கீங்க என்ன காரணம் என நான் தேரிஞ்சிக்கிலாமா" என கேட்டான்.
கனகசுந்தரம் சிறிது நேரம் யோசித்துவிட்டு ஒரு வாட்ஸப் வீடியோ ஒன்றை சுந்தருக்கு காட்டினர் அந்த வீடியோவில் ஒரு போலிஸ்காரர் சிறுநீரை பொது இடத்தில் கழிப்பது போல் அந்த வீடியோ இருந்தது. அந்த வீடியோ சிறுநீர் கழித்த போலீசையும் ஒரு நாயையும் ஒப்புமைபடுத்தியது போல கேலியோடு இருந்தது. அந்த விடியோவைப் பார்க்கும் போது சுந்தருக்கு அடக்க முடியாத அளவு சிரிப்பு வந்து விட்டது.
இருந்தாலும் அவன் சிரிப்பை அடக்கிக்கொண்டு "இது போல் பொது இடத்தில் சிறுநீர் கழிப்பது தவறு தானே சார் " என்று சுந்தர் கேட்டான்.
கனகசுந்தரம் அவனிடம் மெதுவாக பேச ஆரம்பித்தார்.
"தவறு தான் நான் இல்லை என்று சொல்லவில்லை சுந்தரம்.. ஆனால் எங்கள் வேலை பற்றி வீடியோ எடுத்தவர்கள் மறந்துவிட்டனர் என்று நினைக்கும்போது தான் வேதனையாக உள்ளது.
எங்கள் வேலையில் நாங்கள் எப்போதும் பொது இடத்தில் தான் வேலை செய்ய வேண்டும். பாதிக்கு பாதி இடங்களில் இயற்கை உபாதையை கழிக்க கூட இடம் இருக்காது.
பல நேரங்களில் காலையில் வருவதாய் சொன்ன முக்கிய பிரமுகர் மாலையில் தான் வருவார். அதனிடையே போக்குவரத்து நெரிசல் ஆகாமல் நாங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் நாங்கள் இந்த பக்கம் அந்த பக்கம் எங்கும் நகர கூட முடியாது. அந்த இடத்தில் எது நடந்தாலும் எங்களை திட்டுவதற்கு என்றே ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது எங்கள் மேலதிகரிகள் உட்பட.
இந்த வீடியோவில் இருந்த போலிசை பற்றி எனக்கு தெரியாது ஆனால் அவர் வேலை செய்த இடத்தை பற்றியும் அப்போது அவர் இருந்த சூழ்நிலை பற்றியும் எனக்கு நன்கு தெரியும். அந்த சிக்னலை சுற்றி சில கிலோமீட்டருக்கு எந்த கழிவறையுமே இருக்காது. அப்போது காலை வருவதாய் சொன்ன ஒரு முக்கிய பிரமுகர் இதோ கலம்பிட்டோம் அதோ கலம்பிட்டோம் என்று சொல்லி 5 மணி நேரமாகியும் அவர் வரவில்லை.
அவரால் இயற்கை உபாதையை ஒரு கட்டத்தில் கட்டுபடுத்த முடியாமல் பக்கத்தில் உள்ள ஒரு இடத்தில் சிறுநீர் கழிக்கும் போது அதை வீடியோ எடுத்து விட்டனர். அதை எடுத்ததும் இல்லாமல் நாயுடன் சம்பந்தம் படுத்தி போட்டுள்ளனர். இது அவரை அவமானப்படுத்தியது போல தெரியவில்லை எங்கள் எல்லோரையும் அவமானப்படுத்தியது போல இருந்தது. எங்களுடைய கஷ்டம் பொதுமக்களுக்கு தெரியலைனா கூட பரவாயில்லை சுந்தரம் எங்க மேல் அதிகாரிகளுக்கு கூட தெரிய மாட்டுது என்று அவருடைய வேதனையை வெளிப்படுத்தினார்.
சரி சுந்தரம் நான் கலம்புறேன் என்று சொல்லி சிக்னலில் வேலை செய்ய மெதுவாக நடந்து சென்றார்.
சுந்தர் அவனை அறியாமலேயே அவருக்கு ஒரு சல்யூட் அடித்தான் ... சுந்தரத்திற்கு தானாகவே கனகசுந்தரத்தின் மேலும் போலிஸ் மேலும் ஒரு மரியாதை வந்தது...!!!!
எங்கள் வேலையில் நாங்கள் எப்போதும் பொது இடத்தில் தான் வேலை செய்ய வேண்டும். பாதிக்கு பாதி இடங்களில் இயற்கை உபாதையை கழிக்க கூட இடம் இருக்காது.
பல நேரங்களில் காலையில் வருவதாய் சொன்ன முக்கிய பிரமுகர் மாலையில் தான் வருவார். அதனிடையே போக்குவரத்து நெரிசல் ஆகாமல் நாங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் நாங்கள் இந்த பக்கம் அந்த பக்கம் எங்கும் நகர கூட முடியாது. அந்த இடத்தில் எது நடந்தாலும் எங்களை திட்டுவதற்கு என்றே ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது எங்கள் மேலதிகரிகள் உட்பட.
இந்த வீடியோவில் இருந்த போலிசை பற்றி எனக்கு தெரியாது ஆனால் அவர் வேலை செய்த இடத்தை பற்றியும் அப்போது அவர் இருந்த சூழ்நிலை பற்றியும் எனக்கு நன்கு தெரியும். அந்த சிக்னலை சுற்றி சில கிலோமீட்டருக்கு எந்த கழிவறையுமே இருக்காது. அப்போது காலை வருவதாய் சொன்ன ஒரு முக்கிய பிரமுகர் இதோ கலம்பிட்டோம் அதோ கலம்பிட்டோம் என்று சொல்லி 5 மணி நேரமாகியும் அவர் வரவில்லை.
அவரால் இயற்கை உபாதையை ஒரு கட்டத்தில் கட்டுபடுத்த முடியாமல் பக்கத்தில் உள்ள ஒரு இடத்தில் சிறுநீர் கழிக்கும் போது அதை வீடியோ எடுத்து விட்டனர். அதை எடுத்ததும் இல்லாமல் நாயுடன் சம்பந்தம் படுத்தி போட்டுள்ளனர். இது அவரை அவமானப்படுத்தியது போல தெரியவில்லை எங்கள் எல்லோரையும் அவமானப்படுத்தியது போல இருந்தது. எங்களுடைய கஷ்டம் பொதுமக்களுக்கு தெரியலைனா கூட பரவாயில்லை சுந்தரம் எங்க மேல் அதிகாரிகளுக்கு கூட தெரிய மாட்டுது என்று அவருடைய வேதனையை வெளிப்படுத்தினார்.
சரி சுந்தரம் நான் கலம்புறேன் என்று சொல்லி சிக்னலில் வேலை செய்ய மெதுவாக நடந்து சென்றார்.
சுந்தர் அவனை அறியாமலேயே அவருக்கு ஒரு சல்யூட் அடித்தான் ... சுந்தரத்திற்கு தானாகவே கனகசுந்தரத்தின் மேலும் போலிஸ் மேலும் ஒரு மரியாதை வந்தது...!!!!



