அந்த ரோடு வழியாக போகணும்னு நினச்சாலே மகேசுக்கு எரிச்சல் எரிச்சலா வரும். ஏனா ரோடு ரொம்ப மோசமா குண்டும் குழியுமா இருக்கும்... ஆனா விதி தினமும் அந்த ரோட கடந்து தான் அவன் போய் ஆகணும்.
வழக்கம் போல அந்த குண்டும் குழியுமுள்ள ரோட்டில் மகேஷ் திட்டிக்கொண்டே வண்டியை ஓட்டிகொண்டிருந்தான்.
அதே ரோட்டில் ஒருவர் அவரோட மகளை பைக்கில் கூட்டிக்கொண்டு வந்தார். குண்டும் குழியும் உள்ள ரோட்டால் அப்பாவின் முகம் ஒரே இறுக்கமாய் இருந்தது...!!
வழக்கம் போல அந்த குண்டும் குழியுமுள்ள ரோட்டில் மகேஷ் திட்டிக்கொண்டே வண்டியை ஓட்டிகொண்டிருந்தான்.
அதே ரோட்டில் ஒருவர் அவரோட மகளை பைக்கில் கூட்டிக்கொண்டு வந்தார். குண்டும் குழியும் உள்ள ரோட்டால் அப்பாவின் முகம் ஒரே இறுக்கமாய் இருந்தது...!!
ஆனால் அவரோட மகள் மகிழ்ச்சியாய் காணப்பட்டாள்... ஒவ்வொரு முறை பெரிய பள்ளத்தில் வண்டி செல்லும்போது அவள் "டம்ம்ம்மால்" என்று சந்தோஷ கூக்குரல் எழுப்பினாள்.
சின்ன சின்ன பள்ளத்தில் செல்லும்போது "டமாடமாடமாடமால்" என்று கத்திக்கொண்டு இருந்தாள். அவளுடைய ஒவ்வொரு சத்தத்தையும் கேட்க கேட்க அவளுடைய அப்பாவின் முகம் இறுக்கத்திலிருந்து விடுபட்டு சந்தோசமாக மாறியது..
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மகேஷின் மனதிற்குள்ளும் ஒரு பெரிய மாற்றம் வந்தது. அந்த பள்ளத்தின் மீதிருந்த வெறுப்பு முழுவதுமாய் மாறி அவனும் அந்த குண்டும் குழியுமுள்ள ரோட்டை புன்னகையோடு ரசிக்க ஆரம்பித்து விட்டான்...
இப்போது ஒவ்வொரு பள்ளத்திலும் விடும் போது "டமால்" என்று மகேசும் கத்திக்கொண்டிருந்தான்.... மனதிற்குள் மட்டும்....
நீதி : எந்த சூழலிலும் மனதிற்கு சந்தோஷப்பட தெரியும். அதை நாம் தான் புரிந்து வெளிப்படுத்தணும்...








