Tuesday, 18 August 2015

அதி வேகம் ஆபத்தை .தரும்...!!! (சிறுகதை)


ராமுவும் ராஜுவும் அருகருகே குடி இருக்கும் வாலிபர்கள்... இவர்கள் இருவருக்குமே எப்போதுமே ஆகாது.... இருவருமே ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள்...

ராமு படிப்பிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவன். ஆனால் ராஜு அதற்கு நேர் மாறானவன். எப்போதுமே சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பவன்.

ராமுவுக்கு பைக் ரேஸ் ஓட்டுவதில் அலாதிப்பிரியம் உண்டு. அதனால் ஒரு 300 CC  பைக்கை வாங்கினான். எப்போதுமே வேகமாக பைக்கை ஒட்டுவான்... என்னதான் ராஜு ஒழுக்கம் இல்லாதவனாக இருந்தாலும் பைக்கை மிதமான வேகத்தில் தான் ஒட்டுவான்.   ஏனென்றால் வேகமாக ஓட்டினால் அடுத்தவர்களுடன் சேர்ந்து நம் உயிரும் பிரிந்து விடும் என்று தெளிவாய் அறிந்திருந்தான்.


ஒரு நாள் கல்லூரி முடிந்ததும் ராஜு முன்னாடியே வீட்டுக்கு கிளம்பி அவனுடைய வண்டியில் மித வேகத்தில் சென்று கொண்டிருந்தான். அப்போது ராமு அவனுடைய ரேஸ் பைக்கில் வேகமாக பின்னாடி வந்து " நான் ஒரு 10 நிமிசத்துல வீட்டுக்கு போய்டுவேன் நீ ஒரு பத்து நாளுக்குள்ளவாது வீட்டுக்கு வந்துடு" என்று  கிண்டல் செய்து அவனுடைய வண்டியை மின்னல் வேகத்தில் செலுத்தினான்.

ராஜு வண்டியில் செல்லும் போது அவனுடைய கவனத்தை சிதற விடமாட்டான். அதனால் ராமுவின் கேலி அவனை பெரிதாய் பாதிக்கவில்லை. அவன் பயணம் வீட்டை நோக்கி மித வேகத்தில் தொடர்ந்து கொண்டிருந்தது.

ராஜு சில கிலோ மீட்டர் பயணம் செய்த பின் ஒரு விபத்தை பார்க்கிறான். அநேகமாக எதோ பைக் விபத்து போல தெரிகிறதே என்று கிட்ட நெருங்கி பார்த்த பின் தான் அவனுக்கு தெரிகிறது அது ராமுவின் வண்டி.

விசாரித்து பார்த்ததில் ராமுவின் வண்டி வேகமாக வந்ததில் கட்டுப் பாட்டை இழந்து நின்று கொண்டிருந்த லாரி மேல் மோதியது என்று.

உடனே ராஜுஆம்புலன்சை தொலைபேசியில் அழைத்து அருகே இருந்த  மருத்துவமனைக்கு கொண்டு சென்றான். அதே சமயம் அவர்களின் வீட்டுக்கும் தகவல் அனுப்பினான் .. பலமணி நேரம் தீவிர சிகிச்சைக்கு அப்புறம் ராமு பிழைத்து கொண்டதாய் மருத்துவர் அவர்களின் தாய் தந்தைக்கு தகவல் தெரிவிக்கிறார். ஆனால்  சில நாட்கள் ராமு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற வேண்டுமென்று தகவல் தெரிவிக்கிறார்.

ராமுவின் தாயும் தந்தையும் கண்ணீர் மல்க ராஜுவுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.

ராமு அன்றைக்கே அவசர பிரிவில் இருந்து சாதாரண பிரிவிற்கு கொண்டு வந்தார்கள்.

ராஜு ராமுவை பார்க்க செல்கிறான். ராமு மெதுவாய் கண்களை திறந்து ராஜுவை  பார்க்கிறான். அப்பொழுது ராஜு ராம் அருகே சென்று மிகவும் மெல்லிய குரலில் "நான் இன்னும் 10 நிமிசத்துல வீட்டுக்கு போய்டுவேன் நீதான் வீட்டுக்கு வர 10 நாட்களாகும்" என்று சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்கிறான்.

ராமுவின் கண்கள் ராஜுவுக்கு நன்றி சொல்லியும் தான் செய்த தவறை எண்ணியும் கண்ணீரை வெளி கொண்டு வந்தது.

No comments: