சின்ன வயசுல பள்ளிக்கூடம் பிடிக்கல பாடமும் பிடிக்கல
ஆனாலும் தினமும் போனேனே டீச்சரின் மேல் உள்ள பயத்திலே...
தேர்வும் பிடிக்கல அதை எழுதவும் பிடிக்கல - ஆனாலும்
எழுதினேனே அம்மா அப்பாவின் மேல் உள்ள பயத்திலே.....
வீட்டுல வாங்கி வச்சது சாப்பிட தோணல
வீட்டுல செஞ்சதும் புடிக்கல.
ஆனால் பள்ளிக்கு வெளில விக்கிற
ஆயா கையால சாப்பிட மட்டும் பிடிச்சிருக்கு
அது எப்படினு எனக்கும் புரியல.
அக்காவோ தங்கையோ அண்ணனோ தம்பியோ
எந்த வித்தியாசமும் பார்த்ததில்ல
யாரையும் ஒதுக்கி விளையாடியதில்லை
சண்டை வந்தா அடிச்சிக்காம இருந்ததில்லை.
அதிகமா அடி வாங்கிட்டா
அம்மாவிடமோ பாட்டியிடமோ
புகார் செய்ய தவறியதில்லை.
எந்த நாட்காட்டியில் யாரும் பதிவிடவில்லை
ஆனாலும் ஒரே நேரத்தில் ஊரே
ஒரே விளையாட்டு தான் விளையாடினோம்
அது எப்படினு எனக்கு புரிஞ்சியதில்ல
புரிஞ்சிக்கவும் முயற்சி செய்ததுமில்ல.
சரியாக கணக்கு தெரியாது-ஆனாலும்
திருடி தின்ன மாங்காயும் புளியங்காயும்
எலந்த பழத்தையும் பகிர்ந்து உண்ணும் போது
சண்டையே வந்ததில்ல.
ஒரு சின்ன பசங்களையும் போலீஸ் கூப்பிட்டு மிரட்டியதில்லை
ஆனால் போலிஸ பார்த்து நான் ஏன் பயந்து பயந்து
தீவிரவாதி போல ஒடினேன்னு
இதுவரை எனக்கு விளங்கவில்ல ...!!
கை நிறைய காசு இருந்ததில்லை - ஆனால்
அதை காரணம் காட்டி ஊர் சுத்தாம இருந்ததில்ல.
பெரியவங்க யாரும் பள்ளிகூடத்துக்கு போனதில்ல - அதனால
சீக்கிரம் பெரியவனா வளர்ந்துடனும்னு
நினைச்சிகிட்டேஇருந்தேன்
இப்போ பெரியவனா வளர்ந்துட்டேன் - ஆனா
பள்ளிகூடத்துக்கு போகணும்னு மனசு துடிக்குது
அது எதுக்குன்னு எனக்கு இன்னும் புரியல.

2 comments:
Haha... Miss sight adikkadhaan
Haha... Miss sight adikkadhaan
Post a Comment