Friday, 2 March 2018

நீ வாழும் வாழ்க்கை (சிறுகதை)

என் புள்ளைங்க கஷ்டப்பட கூடாதுனு
அவுங்க கூட சந்தோசமா உட்கார்ந்து பேசணும்னு 
அவங்க கூட ஜாலியா விளையாடணும்னு
அவங்க கூட நிம்மதியா இருக்கணும்னு
நிம்மதி இல்லாம தூக்கம் இல்லாம
சோறு இல்லாம சொந்தம் இல்லாம 
கஷ்டப்பட்டு உழைக்க ஆரம்பிச்சேன் 
இப்போ என்னடானா அதுங்க பெருசா வளர்ந்து 
அவங்களோட நண்பர்கள் கூடத்தான் 
விளையாடுவேன்னு கிளம்பி போயிடிச்சிங்க

பசங்க கூடத்தான் நேரத்தை செலவு பண்ணாம 
புத்தி கேட்டு அலைஞ்சு
 (அவங்களுக்கா தான் கஷ்டப்பட்டேன். இருந்தாலும் நேரத்த ஒதுக்காம விட்டுடேன்ல )  ஓவரா ஆடிட்டேன்...

சரி பசங்க கூட தான் விளையாட முடியாம போயிடிச்சு
பேர பசங்க கூடவாவது  சந்தோசமா விளையாடுலாம்னு 
நெனைச்சி பொண்ணுக்காகவும் மாப்பிள்ளைக்காகவும் 
அலைஞ்சு திரிஞ்சு நல்ல துணையை தேடி பிடிச்சி 
சேர்த்து வச்ச காசாலாம் போட்டு  பசங்களுக்கு
கல்யாணம் பண்ணி  வச்சா ஒரே மாசத்துல
புடிக்கல டிவோர்ஸ் பண்ணிவிடுங்கனு வந்து
நிக்குதுங்க.


அப்புறம் ரெண்டு பேரையும் நிக்க வச்சி என்ன
காரணம்னு விசாரிச்சா நான் இருக்கறது
புடிக்கலைனு சொல்லுதுங்க. சரி என்ன எங்க
அனுப்ப போறாங்கன்னு யோசிக்குறதுக்குள்ள
அவங்களே ஒரு நல்ல முதியோர் இல்லமா
பார்த்துட்டு வந்துட்டாங்களா. இப்போ கிளமபினா
நைட்டுக்குள்ள அங்க போய்டலாமான்னு சொல்லுதுங்க.

அப்படினா என்ன அர்த்தம்னா உடனே பார்த்துடுற
போல இருந்துட கூடாதுனு தூரமா அனுப்பி
வைக்கிறாங்க. சரி கிளம்புவோம்னு சொல்லிட்டு
அங்கிருந்து கிளம்பி இப்போ முதியோர் இல்லத்துல
சோறுக்காக வெயிட் பண்றேன்.


இது உங்களோட வாழ்க்கை கொஞ்சம் பார்த்து சூதானமா நடந்துக்குங்க.!!

No comments: