Wednesday, 19 December 2018

தொடர்பில்லாத கவிதைகள் - மகள் என்ற வரம்

1) நீ பேசும்
பேச்சினை நாள் முழவதும் 
கேட்டுக்கொண்டிருக்கிறோம் 
ஆனால் சலிப்பே 
தட்டுவதில்லை 
காரணம் என்னவென்று 
நான் சொல்லி யாருக்கும் 
தெரிவதில்லை 
காரணம் நீயே 
என் வீட்டு தேவதையே ....!!!



2) நாள் முழவதும் 
தூங்குவதையே வேலையாய் 
செய்கின்றாய் 
சொற்ப நிமிடமே 
எழுகின்றாய் 
அதில பாதி நேரம் 
அழுகின்றாய் 
இரண்டே இரண்டு முறை 
சிரிக்கிறாய் 
அந்த சிரிப்பினால் 
நாள் முழுவதிற்கும் தேவையான 
அனைத்தையும் தந்துவிடுகிறாய்....!!


3) இவள் கண்விழிப்பதை
பார்ப்பதற்காக
வீட்டு வாசலில்
காத்து நிற்கும் சூரியனே 
நீ கொஞ்ச நேரம் 
பொறுக்கத்தான் வேண்டும் 
நீண்ட நேரம் 
எங்களை தூங்க விடாமல் 
விளையாடிட்டு விட்டு 
ஆழந்த உறக்கத்தில் 
தற்போது தான் உறங்குகிறாள் ...!

4) அவள்  கூந்தலை 
சேர துடிக்கும் பூக்களே 
நீங்கள் வெகு காலம் 
காத்திருக்க தான் வேண்டும் 
இந்த பிஞ்சி குழந்தைக்கு 
இன்னும் முடி வளரவில்லை 
என்பதை  நீங்கள் 
புரிந்து கொள்ளத்தான் வேண்டும்..!!!




5) சித்திரை சூரிய வெப்பமும்
தன்னை சிறைபிடித்து
குடைபிடிக்கும்
எங்கள் மகள்கள்
வெளியில் வரும்போது ....!!!!
அடங்க மறுக்கும்
அடங்கா புயல்களும்
தனக்கு அணை கட்டி
தென்றலாய் மாறும்
எங்களுடைய மகள்களை
தீண்டும்போது  ....!!!!
ஆரவாரத்தோடு
ஆர்ப்பரிக்கும் கடலும்
அடங்கிப்போய் நிற்கும்
எங்கள் தேவதைகளுடைய
பாதங்களை வருடும்போது ...!!!!

2 comments:

Anonymous said...

nice kavithai

Anonymous said...

Super....