Monday, 28 September 2015

யார் உன் நண்பன்?

உன்னிடம் 
கையிலும் பையிலும்
காசு கூட இல்லாமல் 
எவன் ஒருவனிடம் சேர்ந்து 
உன்னால் எந்த வித
தடு மாற்றமில்லாமல்
வெளியில் செல்ல முடிகின்றதோ 
அவனே உன் நண்பன்..!!!


மச்சி களம்பி வீட்டுக்கு வாடா.. 
என்று சொன்னவுடன் ஏன் 
என்று ஒரு வார்த்தைக் கூட கேட்காமல் 
ஒருவன் அடுத்த நிமிடமே 
உன் வீட்டுக்கு வந்தால் 
அவனே உன் நண்பன்....!!!!

நீ செய்யும் தவறை 
சரியான நேரத்தில் சுட்டிக்காட்டி 
அதை - சரி செய்ய 
உனக்கு உதவி 
புரிகிறான் என்றால் 
அவனே உன் நண்பன்...!!!

சந்தோசத்தை 
ஆயிரம் நபரிடம் 
பகிர்ந்து கொண்டாலும் 
சோகம் என்று வரும்போது
யாருடைய ஞாபகம் 
உனக்கு உடனே வருகிறதோ 
அவனே உன் நண்பன்...!!!

நகைச்சுவையான 
தருணங்களை தவிர 
மற்ற நேரங்களில் யார் 
ஒருவனிடம் உண்மையை மட்டும் 
பேசுகிறாயோ 
அவனே உன் நண்பன்...!!!

No comments: