நம்ம காதலை அப்பாகிட்ட எப்படி சொல்றது என்று தெரியாமல் மிகவும் குழப்பமாக இருந்தாள் மைதிலி.
அங்கும் இங்கும் அலைந்தவாறு இரவெல்லாம் உறக்கமில்லாமல் தவித்தாள்.
அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு சாமியெல்லாம் கும்பிட்டு விட்டு அப்பா மோகனுக்காக காத்துக்கொண்டிருந்தாள்.
காலையில் அலுவலகத்திற்கு செல்ல தயாராய் இருந்த அப்பாவின் முன் பவ்யமாய் நின்றாள்.
அவளை பார்த்ததும் அப்பாவிற்கு புரிந்து விட்டது இவள் ஏதோ சொல்ல தயங்குகிறாள் என்று.
"என்னம்மா" என்று கேட்டார் மோகன்.
"ஒன்னும் இல்ல பா " என்று சொன்னாள்.
"பரவாயில்ல மா. சொல்லுமா" என்றார் மோகன்.
வாயிலிருந்து வார்த்தை வரவும் அதை முழுங்கவும் செய்து கொண்டே இருந்தாள்.
மிகவும் தயங்கி கொண்டே "இல்ல பா, என் கூட ரமேஷ் என்ற ஒருத்தன் வேல பார்க்குறான் பா. ரொம்ப நல்ல பையன் பா. அவன் குடும்பமும் நல்ல குடும்பம் பா" என்றாள்.
"அதற்கு-மா" என்றார் மோகன்.
"எனக்கு அந்த பையன பிடிச்சிருக்கு" என்று இழுத்தாள்.
"என்ன மா அந்த பையன காதலிக்கிறாயா?" என்றார்.
"இல்ல பா உங்களுக்கு பிடிக்கலேன்னா வேணாம் பா" என்றாள்.
மோகன் சிரித்துக்கொண்டே.
"5 மணிக்கு அவர நம்ம வழக்கமா போற ஹோட்டலுக்கு வர சொல்லுமா. பேசலாம். உங்க ரெண்டு பேருக்கும் பொருத்தம் சரியா இருந்தா கல்யாணம் பண்ணி வச்சிடலாம் " என்றார்.
அதை கேட்டதும் உள்ளுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி பறப்பது போல் ஒரே ஆனந்தம் அளவளாவிக் கொண்டிருந்தது.
இருந்தாலும் இந்த மாதிரி எதார்த்தமான வார்த்தைகளை அவளால் நம்பவே முடியவில்லை. பெரியதாய் அப்பா ஆர்ப்பாட்டம் பண்ணுவார் என்ற எதிர்பார்த்த அவளுக்கு ஏமாற்றம்.
உடனே ரமேசுக்கு போன் செய்து நடந்ததை தெரிவித்தாள். அவனுக்கும் பெரிய சந்தோசம்.
"சரியாய் 5 மணிக்கு நான் வந்துடுவேன் " என்றான் மகிழ்ச்சி பொங்க.
"ஹே அப்பா பொருத்தம் சரியா இருந்தா தான் கல்யாணம் செய்யலாம்னு சொன்னாரு டா .. அதனால நான் என் ஜாதகத்த வாட்ஸ்ஆப்ல அனுப்புறேன். நீ ரெண்டு ஜாதகத்துக்கும் பொருத்தம் பாரு. சரியா இருந்தா விட்டுடு. இல்லைனா ரெண்டு பேருக்கும் பொருந்துற போல உன் ஜாதகத்த தயார் செஞ்சி எடுத்துட்டு வந்து அப்பா கிட்ட கொடுத்துடு" என்று சொன்னாள் மைதிலி.
அன்றைக்கு அலுவலகத்துக்கு லீவ் போட்டு விட்டு ஜாதகம் பொருத்தம் பார்க்க புகழ் பெற்ற ஒரு ஜோதிடரிடம் சென்றான்.
அவர் இரண்டு ஜாதகத்தையும் வாங்கி பார்த்தார்.
என்ன ஆச்சரியம் இரண்டு ஜாதகத்துக்கும் அத்தனை பொருத்தமும் சரியாய் இருந்தது.
அந்த சந்தோசத்தில் அந்த ஜோதிடர் கேட்ட தொகைக்கும் அதிகமாய் கொடுத்து நன்றி சொல்லிவிட்டு மைதிலிக்கு போனில் தகவலை தெரிவித்தான்.
அவளுக்கு பெரிய நிம்மதி.
மாலை 4.30 மணிக்கே ரமேசும் மைதிலியும் ஹோட்டலுக்கு சென்று மோகனுக்காக காத்துக்கொண்டிருந்தார்கள்.
சரியாய் 4.45 மணிக்கு மோகன் வந்தார். மோகனுக்கு ரமேஷை அறிமுகம் செய்தாள் மைதிலி..
தற்போது மூன்று பேரும் சுற்றி அமர்ந்து கொண்டிருந்தார்கள். மைதிலி பதற்றத்தில் இருந்ததால் தன் நகத்தை பிய்த்துக்கொண்டிருந்தாள்.
அப்போது மோகன் பேச ஆரம்பித்தார்.
"நீங்க எத்தன வருசமா இந்த மொபைல யூஸ் பண்றீங்க" என்று மோகன் ரமேஸ் கையில் இருந்த ஆன்டிராய்டு மொபைலை காட்டி கேட்டார்.
அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. என்னது சம்பந்தம் இல்லாமல் மொபைலை பற்றி கேட்குறார் என்று நினைத்துக்கொண்டே.
"1 வருஷம் அங்கிள்" என்று சொன்னான் ரமேஷ்.
"நீங்க எத்தன வருசமா காதலிக்கிறீங்க" என்றார்.
"3 வருஷம் அங்கிள் " என்றான் ரமேஷ்.
"இதுவரை ஏதாவது உங்களுக்குள் மறைத்து இருக்கிறீர்களா ?" என்று கேட்டார் மோகன்.
"எதுவும் மறைத்ததில்லை அங்கிள்" என்றான் ரமேஸ்.
"நீ எப்படி மா?" என்று மைதிலியை பார்த்து கேட்டார்.
"நானும் எதுவும் மறைத்ததில்லை பா" என்றாள் மைதிலி.
"உங்க காதல் எவ்வளவு உறுதியானது என்று நினைக்குறீங்க?" என்று இரண்டு பேரிடமும் அந்த கேள்வியை முன் வைத்தார்.
"மைதிலிக்காக என் உயிரை கூட கொடுப்பேன் அங்கிள்" என்றான். அதே மாதிரி பதில் மைதிலியிடமும் இருந்தும் வந்தது.
"உங்க உயிரலாம் கொடுக்க வேண்டாம். உங்க இரண்டு பேரோட போன் மட்டும் கொடுங்க" என்றார் மோகன்.
இரண்டு பேரும் புரியாமல் விழித்தார்கள் எதுக்கு மொபைலை கேக்குறார் என்று.
இருந்தாலும் இரண்டு பெரும் தங்களுடைய மொபைலை அவரிடம் நீட்டினார்கள்.
அந்த இரண்டு மொபைலையும் வாங்கி கொண்டு ரமேஷ் மொபைலை மைதிலியிடமும் மைதிலி மொபைலை ரமேசிடம் கொடுத்தார் மோகன்.
கொடுத்துவிட்டு பேச ஆரம்பித்தார் மோகன் "எனக்கு ஜாதகம் ஜோசியம் மேலலாம் சுத்தமா நம்பிக்கை இல்ல. அதை பார்த்து நடந்த எவ்வளவோ கல்யாணம் தோல்வியில் முடிஞ்சத நான் பார்த்திருக்கேன்.
உங்கள் வருங்காலத்தில் பிரச்சனை வருவதற்கான மூலப்பொருள் நீங்க கையில் வைத்திருக்கிறீர்களே இந்த மொபைல் தான். அதனால் உங்க இரண்டு பேருடைய மொபைலையும் நல்லா ஆராய்ந்து பாருங்க. பார்த்ததுக்கு அப்பறம் ஒரு மணி நேரம் கழித்து வந்து என்னிடம் உங்களுடைய முடிவை சொல்லுங்க. அந்த முடிவு படியே நடக்கலாம்".
"இதென்னப்பா சின்ன புள்ளதனமா இருக்கு ரமேஷ் என்னிடம் எதுவுமே மறைத்ததில்லை நானும் மறைத்ததில்லை " என்று வாதிட்டாள் மைதிலி.
"இருக்கட்டும் மா. ஒரு மணி நேரம் கழித்து இதே மாதிரி அப்பாவிடம் சொன்னால் நான் ரொம்ப சந்தோசப்படுவேன்" என்று பதில் சொன்னார்.
இரண்டு பெறும் அதை ஆமோதித்து இரு வெவ்வேறு இடங்களில் தனிமையில் அமர்ந்து மொபைலை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்.
ஒரு மணி நேரம் முடிந்தது.
இருவரும் மோகன் முன் வந்து நின்றார்கள். இருவடைய முகத்திலும் ஒரே இறுக்கம் காணப்பட்டது.
அவர் முன் உட்கார்ந்த பிறகு சில நிமிடங்கள் மெளனமாக இருந்தார்கள்.
"இப்ப உங்களுடைய முடிவை நான் தெரிஞ்சிக்கலாமா" என்றார் மோகன்.
இரண்டு பேருடைய முகத்திலும் இன்னும் மௌனம் மட்டுமே குடி இருந்தது.
பதில் இரண்டு பேரிடமும் இருந்து வரவில்லை.
மோகனுக்கு என்ன நடந்திருக்கும் என்று தெரிந்தது அதனால் சின்ன மெல்லிய சிரிப்புடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார்.
அங்கும் இங்கும் அலைந்தவாறு இரவெல்லாம் உறக்கமில்லாமல் தவித்தாள்.
அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு சாமியெல்லாம் கும்பிட்டு விட்டு அப்பா மோகனுக்காக காத்துக்கொண்டிருந்தாள்.
காலையில் அலுவலகத்திற்கு செல்ல தயாராய் இருந்த அப்பாவின் முன் பவ்யமாய் நின்றாள்.
அவளை பார்த்ததும் அப்பாவிற்கு புரிந்து விட்டது இவள் ஏதோ சொல்ல தயங்குகிறாள் என்று.
"என்னம்மா" என்று கேட்டார் மோகன்.
"ஒன்னும் இல்ல பா " என்று சொன்னாள்.
"பரவாயில்ல மா. சொல்லுமா" என்றார் மோகன்.
வாயிலிருந்து வார்த்தை வரவும் அதை முழுங்கவும் செய்து கொண்டே இருந்தாள்.
மிகவும் தயங்கி கொண்டே "இல்ல பா, என் கூட ரமேஷ் என்ற ஒருத்தன் வேல பார்க்குறான் பா. ரொம்ப நல்ல பையன் பா. அவன் குடும்பமும் நல்ல குடும்பம் பா" என்றாள்.
"அதற்கு-மா" என்றார் மோகன்.
"எனக்கு அந்த பையன பிடிச்சிருக்கு" என்று இழுத்தாள்.
"என்ன மா அந்த பையன காதலிக்கிறாயா?" என்றார்.
"இல்ல பா உங்களுக்கு பிடிக்கலேன்னா வேணாம் பா" என்றாள்.
மோகன் சிரித்துக்கொண்டே.
"5 மணிக்கு அவர நம்ம வழக்கமா போற ஹோட்டலுக்கு வர சொல்லுமா. பேசலாம். உங்க ரெண்டு பேருக்கும் பொருத்தம் சரியா இருந்தா கல்யாணம் பண்ணி வச்சிடலாம் " என்றார்.
அதை கேட்டதும் உள்ளுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி பறப்பது போல் ஒரே ஆனந்தம் அளவளாவிக் கொண்டிருந்தது.
இருந்தாலும் இந்த மாதிரி எதார்த்தமான வார்த்தைகளை அவளால் நம்பவே முடியவில்லை. பெரியதாய் அப்பா ஆர்ப்பாட்டம் பண்ணுவார் என்ற எதிர்பார்த்த அவளுக்கு ஏமாற்றம்.
உடனே ரமேசுக்கு போன் செய்து நடந்ததை தெரிவித்தாள். அவனுக்கும் பெரிய சந்தோசம்.
"சரியாய் 5 மணிக்கு நான் வந்துடுவேன் " என்றான் மகிழ்ச்சி பொங்க.
"ஹே அப்பா பொருத்தம் சரியா இருந்தா தான் கல்யாணம் செய்யலாம்னு சொன்னாரு டா .. அதனால நான் என் ஜாதகத்த வாட்ஸ்ஆப்ல அனுப்புறேன். நீ ரெண்டு ஜாதகத்துக்கும் பொருத்தம் பாரு. சரியா இருந்தா விட்டுடு. இல்லைனா ரெண்டு பேருக்கும் பொருந்துற போல உன் ஜாதகத்த தயார் செஞ்சி எடுத்துட்டு வந்து அப்பா கிட்ட கொடுத்துடு" என்று சொன்னாள் மைதிலி.
அன்றைக்கு அலுவலகத்துக்கு லீவ் போட்டு விட்டு ஜாதகம் பொருத்தம் பார்க்க புகழ் பெற்ற ஒரு ஜோதிடரிடம் சென்றான்.
அவர் இரண்டு ஜாதகத்தையும் வாங்கி பார்த்தார்.
என்ன ஆச்சரியம் இரண்டு ஜாதகத்துக்கும் அத்தனை பொருத்தமும் சரியாய் இருந்தது.
அந்த சந்தோசத்தில் அந்த ஜோதிடர் கேட்ட தொகைக்கும் அதிகமாய் கொடுத்து நன்றி சொல்லிவிட்டு மைதிலிக்கு போனில் தகவலை தெரிவித்தான்.
அவளுக்கு பெரிய நிம்மதி.
மாலை 4.30 மணிக்கே ரமேசும் மைதிலியும் ஹோட்டலுக்கு சென்று மோகனுக்காக காத்துக்கொண்டிருந்தார்கள்.
சரியாய் 4.45 மணிக்கு மோகன் வந்தார். மோகனுக்கு ரமேஷை அறிமுகம் செய்தாள் மைதிலி..
தற்போது மூன்று பேரும் சுற்றி அமர்ந்து கொண்டிருந்தார்கள். மைதிலி பதற்றத்தில் இருந்ததால் தன் நகத்தை பிய்த்துக்கொண்டிருந்தாள்.
அப்போது மோகன் பேச ஆரம்பித்தார்.
"நீங்க எத்தன வருசமா இந்த மொபைல யூஸ் பண்றீங்க" என்று மோகன் ரமேஸ் கையில் இருந்த ஆன்டிராய்டு மொபைலை காட்டி கேட்டார்.
அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. என்னது சம்பந்தம் இல்லாமல் மொபைலை பற்றி கேட்குறார் என்று நினைத்துக்கொண்டே.
"1 வருஷம் அங்கிள்" என்று சொன்னான் ரமேஷ்.
"நீங்க எத்தன வருசமா காதலிக்கிறீங்க" என்றார்.
"3 வருஷம் அங்கிள் " என்றான் ரமேஷ்.
"இதுவரை ஏதாவது உங்களுக்குள் மறைத்து இருக்கிறீர்களா ?" என்று கேட்டார் மோகன்.
"எதுவும் மறைத்ததில்லை அங்கிள்" என்றான் ரமேஸ்.
"நீ எப்படி மா?" என்று மைதிலியை பார்த்து கேட்டார்.
"நானும் எதுவும் மறைத்ததில்லை பா" என்றாள் மைதிலி.
"உங்க காதல் எவ்வளவு உறுதியானது என்று நினைக்குறீங்க?" என்று இரண்டு பேரிடமும் அந்த கேள்வியை முன் வைத்தார்.
"மைதிலிக்காக என் உயிரை கூட கொடுப்பேன் அங்கிள்" என்றான். அதே மாதிரி பதில் மைதிலியிடமும் இருந்தும் வந்தது.
"உங்க உயிரலாம் கொடுக்க வேண்டாம். உங்க இரண்டு பேரோட போன் மட்டும் கொடுங்க" என்றார் மோகன்.
இரண்டு பேரும் புரியாமல் விழித்தார்கள் எதுக்கு மொபைலை கேக்குறார் என்று.
இருந்தாலும் இரண்டு பெரும் தங்களுடைய மொபைலை அவரிடம் நீட்டினார்கள்.
அந்த இரண்டு மொபைலையும் வாங்கி கொண்டு ரமேஷ் மொபைலை மைதிலியிடமும் மைதிலி மொபைலை ரமேசிடம் கொடுத்தார் மோகன்.
கொடுத்துவிட்டு பேச ஆரம்பித்தார் மோகன் "எனக்கு ஜாதகம் ஜோசியம் மேலலாம் சுத்தமா நம்பிக்கை இல்ல. அதை பார்த்து நடந்த எவ்வளவோ கல்யாணம் தோல்வியில் முடிஞ்சத நான் பார்த்திருக்கேன்.
உங்கள் வருங்காலத்தில் பிரச்சனை வருவதற்கான மூலப்பொருள் நீங்க கையில் வைத்திருக்கிறீர்களே இந்த மொபைல் தான். அதனால் உங்க இரண்டு பேருடைய மொபைலையும் நல்லா ஆராய்ந்து பாருங்க. பார்த்ததுக்கு அப்பறம் ஒரு மணி நேரம் கழித்து வந்து என்னிடம் உங்களுடைய முடிவை சொல்லுங்க. அந்த முடிவு படியே நடக்கலாம்".
"இதென்னப்பா சின்ன புள்ளதனமா இருக்கு ரமேஷ் என்னிடம் எதுவுமே மறைத்ததில்லை நானும் மறைத்ததில்லை " என்று வாதிட்டாள் மைதிலி.
"இருக்கட்டும் மா. ஒரு மணி நேரம் கழித்து இதே மாதிரி அப்பாவிடம் சொன்னால் நான் ரொம்ப சந்தோசப்படுவேன்" என்று பதில் சொன்னார்.
இரண்டு பெறும் அதை ஆமோதித்து இரு வெவ்வேறு இடங்களில் தனிமையில் அமர்ந்து மொபைலை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்.
ஒரு மணி நேரம் முடிந்தது.
இருவரும் மோகன் முன் வந்து நின்றார்கள். இருவடைய முகத்திலும் ஒரே இறுக்கம் காணப்பட்டது.
அவர் முன் உட்கார்ந்த பிறகு சில நிமிடங்கள் மெளனமாக இருந்தார்கள்.
"இப்ப உங்களுடைய முடிவை நான் தெரிஞ்சிக்கலாமா" என்றார் மோகன்.
இரண்டு பேருடைய முகத்திலும் இன்னும் மௌனம் மட்டுமே குடி இருந்தது.
பதில் இரண்டு பேரிடமும் இருந்து வரவில்லை.
மோகனுக்கு என்ன நடந்திருக்கும் என்று தெரிந்தது அதனால் சின்ன மெல்லிய சிரிப்புடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார்.

1 comment:
Moganin mounam next title huh?:)
Post a Comment