மனம் என்ற ஒன்று
தினம் தினம் பாடாய் படுகிறதே..
காற்றை போல் உருவமில்லை
உணரத்தான் முடிகிறதே...
உன் விழிகளில் வழியும் நீரை
துடைக்க என் கைகள் துடிக்கிறதே
இது கனவா இல்லை நிஜமா
என புரியாமல் விழிக்கிறேன் விழிக்கிறேன். (மனம் என்ற ஒன்று..)
அவளை பார்த்த அந்த நொடி அந்த நொடி
என் ஆயுள் பாதி முடிந்ததேன் என்று தோன்ற வைத்ததே..
ஆனால் அந்த ஒரு நொடி ஒரு நொடி
எல்லாம் எல்லாம் கை மீறி போனதே போனதே போனதே..
வாழ்க்கை முழுவதும் உன்னோடு
வாழ ஆசை பட்டேன் நானே நானே
உன் வாழ்க்கையே முடிந்து போனது என்று
சொன்னாயே சொன்னாயே நீயே நீயே... (மனம் என்ற ஒன்று..)
உன் வாழ்க்கையும் என் வாழ்க்கையும் ஒன்றானதே
அது ஏன் இன்று இரண்டு துண்டானதே...!
அது ஏன் இன்று இரண்டு துண்டானதே...!
வாழவே பிடிக்கவில்லை எனக்கு தான் எனக்கு தான்
எமன் முன்னே போயி நின்றேன் சாக தான் நான் சாக தான்
தோல்விகள் என்னை துரத்தியதே
சாவிலும் என்னை விரட்டியதே விரட்டியதே.. (மனம் என்ற ஒன்று..).

3 comments:
Nandru.....Migavum...
Super...
Yaaru pa andha piguru?
Post a Comment