அவளை நானும் தேடுகிறேன்.
அழகியை நானும் தேடுகிறேன்.
கண் முன்னே இருந்தவளை திடீரென தொலைத்தேனே..!!
கண்கட்டி வித்தை போல பார்க்கும்போதே தொலைந்தாளே...!!
அவள் கூந்தல் ஓரத்தில் ஒட்டிகொண்டிருக்கும் பூப்போல ஆனேனே
ஒரு முறை என்னை பார்ப்பாளா என்று ஏங்கினேனே
அவள் விழியில் கோலமிட மை உதவியதே
அவள் வாழ்வினில் கோலமிட என் கை உதவுமே
அதை நானும் தெரிவிக்க துடிக்கிறேனே
அவள் மறுத்து விடுவாளோ என்று தயங்கினேனே..!!
சின்னஞ்சிரு பட்டாம்பூச்சியும் அவளிடம் வந்து பேசுதே.
அதைக் கண்டு என் மனமும் ஏங்கித் தவிக்குதே.
உனக்கு என்று காத்துக்கொண்டிருக்குதே நானும் என் மனமும்....
சீக்கிரம் வந்து என்னிடம் சேர்வாயோ...!!!
அழகென்ற திமிரே வேணாம்
உன் அழகை முறியடிக்க நம் குழந்தை இருக்கு..
அதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளடி...!!!.
No comments:
Post a Comment