Saturday, 18 June 2016

பெண்கள்(ளே) ஜாக்கிரதை (சிறுகதை)

 பரணியின் வீட்டில் யாரும் இல்லாததால் மகாவை வீட்டிற்கு அழைத்தான். அவளும் அவன் மீது உள்ள காதலால் சரி என்று சம்மதித்து அவனுடன் வீட்டுக்கு சென்றாள்...

பரணி வீடு கோட்டை போல் இருந்ததை பார்த்து பிரம்மித்தாள்.

அவர்கள் வீட்டுக்குள் சென்ற நேரம் பார்த்து பரணியின் தொலைபேசி மணி அடிக்க "நீ வீட்ட சுத்தி பாரு மகா நான் பேசிட்டு வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு வெளியே வந்து பேசினான்.

"மச்சி மகா வீட்டுக்கு வந்துருக்குடா.. இன்னியோட இவள முடிச்சிட்டு கழட்டி விட்ருவேன்டா.

கொஞ்சம் பயந்த பொண்ணு தான் நடந்தத வெளில சொல்ல பயப்படுவா அது நமக்கு ஒரு அட்வான்டேஜ். எவ்வளவு அலைய விட்டா. நல்லா அனுபவிக்கட்டும்." என்று போனில் அவன் நண்பனிடம் பேசி சிரித்துக்கொண்டிருந்தான் பரணி.

இவனை காணோம் என்று தேடி வந்த மகா பரணி பேசுவதைக் கேட்டுவிட்டாள்.

உடனே வீட்டுக்குள் ஓடிப்போய் வாயை மூடிகொண்டு ஓ-வென்று கதறி அழுதாள். என்ன செய்வதென்று யோசித்தாள். 

அவன் வீட்டுக்குள் உள்ளே வந்ததும் புன்னகை புரிந்தாள். அதை பார்த்ததும் "ஆஹா உசார் ஆய்ட்டாடா" என்று கிட்ட நெருங்கி முத்தம் கொடுக்க முயற்சி செய்யும்போது அவள் அவனுடைய மர்ம உறுப்பில் எட்டி உதைத்தாள். 

உதைத்த மறுகனமே அவன் நிலைகுலைந்து கீழே சரிந்தான்.

 கீழே விழுந்து "ஐயோ... ஐயோ.... வலிக்குதே..." என்று கத்தினான். 

இதுதான் தப்பிக்க சரியான சந்தர்ப்பம் என்று கருதி ஓடிப்போய் அவளுடைய பையை எடுத்துக்கொண்டு ஓடி கதவைத் திறக்கும் போது அவனை திரும்பி பார்த்தாள்.

அவன் வலியால் துடிதுடித்துக் கொண்டிருந்ததை பார்த்ததும் மனசு கேக்காமல் திரும்பி அவனிடம் வந்தாள். 

அவள் கை பையை பக்கத்தில் வைத்துவிட்டு "ஹே சாரிடா சாரிடா.. வலிக்குதா.. நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேனு தெரியுமா?" என்று சொல்லிக்கொண்டே அவன் தலையை தன் மடிமீது வைத்தாள் ..

"என்னடி இப்படி பண்ணிட்ட ரொம்ப வலிக்க்க்குதுடி" என்று அழுது கொண்டே மெதுவாய் கண்ணை திறந்து அவளை பார்த்து சொன்னான்.

அந்த நேரத்தில் அவள் கை பையில் இருந்த பெப்பர் ஸ்ப்ரே எடுத்து அவன் கண்ணில் அடித்தாள். 

அடித்துவிட்டு சொன்னாள் "அமைதியான பொண்ணுனா அடங்கி போற பொண்ணு இல்லடா அடக்கிட்டு போற பொண்ணுங்கடா.... நீ அழிக்க நினைக்கறது ஒரு பொண்ணோட கற்ப இல்லடா ஒரு குடும்பத்தோட வாழ்க்கைய. இன்னொரு பொண்ண தொட நினைக்கும்போது இதலாம் உனக்கு ஞாபகம் வரனும் டா".என்று சொல்லிவிட்டு அவளுடைய கை பையை ஸ்டைலாய் மாட்டிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

1 comment:

Anonymous said...

soooper