Thursday, 3 September 2015

அவள் (கவிதை )....


உன்னை பற்றி கவிதை எழுத துடிக்குதடி மனது
ஆனால் உன் நினைப்பு அடிக்கடி வந்து தடுக்குதடி..

சில நிமிடங்கள் உன்னை நினைத்துவிட்டு
எழுதலாம் என்று நினைத்தேனடி - ஆனால்
என் மொத்த நிமிடத்தையும்
உன் நினைவுகள் ஆட்கொண்டதடி....!!!

உன்னை தூரத்தில் தான்  பார்த்தேனடி
பார்த்தவுடன் பட்டென்று மனதுக்குள் ஒட்டிக்கொண்டாயடி.

உன் மேல் எனக்கு வந்த காதல் வாழ்க்கையின்
ஒரு அங்கம் தான் என்று நினைத்தேனடி - ஆனால்
நீதான் என் வாழ்க்கையே ஆகிவிட்டாயடி.

உன் முக அழகை என் பர்ஸுக்குள் வைத்தேனடி
உன் அக அழகை என் மனதுக்குள் வைத்தேனடி.

என்னை காணாமல் நீ அழும் போது ஒரு சிறு குழந்தை போல ஆனாயடி..!!
நான் தோல்விகளில் துவளும் போது சோதனைகளை கடக்க கற்று தந்தாயடி.

உன் வீரத்தை பார்த்து அப்போது வியந்தேனடி..
உன்னை குழந்தை என்று நினைத்த என்னை நினைத்து வருந்தினேனடி....!!!!

உன் வாழ்க்கையும் என் வாழ்க்கையும் ஒன்றாக ஆனதடி
இந்த இனிமையான வாழ்க்கை என்றுமே நிலைக்கட்டுமடி....!!!!


2 comments:

Krishna's Journey said...

Nice one Vijayan ji....good rhyming and shows you are in deep love :) - Krishna Prabhakar - Polaris

VK said...

Thank You Krishna.. ;) ... Wanted to tell you that I'm a Married guy.. :) :)